Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

யாதவ் மகா சபையின் சங்கித்தனம்.

யாதவ் மகா சபையின் சங்கித்தனம்.

வரலாற்றில் இதுவரை நடந்துள்ள எந்த நாடளுமன்றத் தேர்தலிலும் நடக்காத ஒன்றை யாரும் செய்யாத ஒன்றை நாம் தமிழர் கட்சி செய்து காட்டியுள்ளது. அதற்க்கு அக்கட்சியின் தலைமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் கோனார் கொற்றம் சார்பாக சமர்பிக்கிறோம்.

எல்லா தமிழ் இனக்குழு மக்களுக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் சமமாக பங்கீட்டு தேர்தலில் போட்டியிட வாயப்பளித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளோ, தேசிய கட்சிகளோ செய்யாத ஒன்றை நாம் தமிழர் கட்சி கோனார் மக்களுக்கு செய்துள்ளது.

அதுதான் இரண்டு கோனார் இன வேட்பாளர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. உண்மையில் வரலாற்றில் இது மிக முக்கியமான நிகழ்வு

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் கோனாரான தொழில் முனைவோர் சத்யா அவர்களுக்கும், மதுரை நாடளுமன்றத் தொகுதியில் கோனாரான பேராசிரியர் சத்யா தேவி அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சமூக நீதி அடிப்படையில் கோனார் இன பெண்கள் இருவரையும் நிறுத்தியுள்ளது.

உண்மையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பிசேபி செய்யாததை நாம் தமிழர் கட்சி செய்துள்ளது. உடனே நீங்கள் கேட்கலாம் பிசேபி தேவநாதனுக்கு வழங்கியுள்ளது என்று. தேவநாதன் தமிழர் இல்லை என்பதை வெகு காலமாக வலியுறுத்துகிறோம். உத்திரபிரதேச பட்டியல் இனக் கட்ட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பிரிவு தலைவராக இருந்தவர் எப்படி தீடீர் என யாதவராகி மற்றொரு அதே உத்திரபிரதேச யாதவர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தமிழக தலைவரானார் என்ற ஐயம் சிறுபிள்ளைக்கும் எழும். அறிவுசார்ந்த நம் கோனார் சொந்தங்களே சிந்தியுங்கள். வந்தோர் போனோர் எல்லாரும் இடையர் களை ஆள நாம் என்ன நிலமற்றவர்களா என்ன. உண்மையில் அவர் யாதவர்/கோனார் தான என்ற ஐயம் வெகுகாலமாக இங்கு நிலவுகிறது.

உண்மையில் தேவநாதன் தமிழர் என்றால் அவர் இடையரில் என்ன பிரிவைச் சார்ந்தவர் என்று பொதுவெளியில் சான்றுகளோடு வெளியிடலாம். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள். காரணம் பல காலமாக தெலுங்குக் குள்ள நரிகளுக்கு ஆட்டுக் தோல் போர்த்தியே பழக்கம். அப்படி திராணி இருந்தால் அவர் தூய தமிழர் என்று மெய்ப்பித்தால் கோனார் கொற்றம் ஏற்றுக்கொள்ளும்.

உண்மையில் நாம் தமிழர் கட்சியின் இந்த சமூக நீதிச் செயலுக்காகவே தமிழகமெங்கும் இருக்கும் ஒவ்வொரு இடையரும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும்.

இங்குள்ள இடையர் மக்களின் அடையாளத்தில் பல காலமாக தெலுங்கு பேசும் மக்களைத் தலைவராகத் கொண்டு செயல்படும் யாதவ் மகாசபை குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்தோடு பிசேபிக்கு ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படுகிறது என்பதுதான் உண்மை.

அப்படியான செயல்பாடுதான் அண்ணன் பொட்டல் துரையை நெல்லையில் இறக்கி அக்கா சத்யா அவர்களுக்கு விழப்போகும் ஓட்டை பிசேபிக்கு கை மாற்ற முயல்கிறது.

எங்காவது இப்படி நடப்பதுண்டா. அக்கா சத்யா பாத்தாண்டுகளுக்கு மேலாக நாம் தமிழர் கட்சியில் இருப்பதோடு நெல்லையில் நடந்த நம் சீவலபேரி பூசாரி கொலைகளுக்காக போரடியதும் சத்யா அவர்கள் தான். அந்த கொலைகளை கண்டித்து அறிக்கை வெளியிட்ட ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே என்பதை உணர்க. இந்த கொலை விசத்தில் தமிழ் நாடு யாதவ மகாசபையின் நிலைபாடு என்ன. இதுவரை ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கபட்டதா. பாதிக்கபட்டவர்களுக்கு ஏதாவது நிதியிதவி செய்துள்ளாதா என்றால் ஒன்றும் இல்லை. ஆனால் சத்யா அவர்கள் கோனார் கொற்றத்தின் மூலம் அவர்களால் இயன்ற தொகையை பாதிக்க பட்டவர்களுக்கு கொடுத்துள்ளார்.

உண்மையில் பிசேபியின் அரசியல் தந்திரம் தமிழ்நாட்டில் பலிக்காது. பிசேபியின் அரசியல் ஒரு போதும் இங்குள்ள தமிழ் நிலத்துக்கும் தமிழருக்கும் உதவாது. அது தமிழர்களை மதமாய் பிரிப்பதை மட்டுமே செய்யும்.

அப்டிபடயான பிசேபி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அண்ணன் பொட்டல் துரையை பெரும் தொகை கொடுத்து களத்தில் இறக்கி விட்டுள்ளனர் பிஜேபியினர்.

உண்மையில் தமிழராகிய இடையர்களின் மேல் அக்கறை இருந்திருந்தால் பொட்டல் துரையை இராமநாதபுரத்திலோ, சிவகங்கையிலோ இறக்கியிருக்காலாமே.

இந்த இரு மாவட்டங்களில் இடையர்களின் எண்ணிக்கை நெருக்கமாக உள்ளது.

தமிழ்க் யாதவ் மகாசபை எப்போதும் தமிழர்களாகிய இடையர்களுக்கானது இல்லை என்று பல காலமாக காட்டிக்கொண்டே வருகிறது.

நெல்லை இடையர்களே சத்யா அவர்களுக்கும் மதுரை தொகுதி சத்யா தேவிக்கும் பெருவாரியான வாக்கு செலுத்தி சத்யா அவர்களின் வெற்றியைச் சாத்தியப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.


கோனார் கொற்றம்

தமிழ்குடிகள்

share